துளைகளை அடைக்கவிடாமல் கேரள அரசு தடுத்துக்கொண்டே இருந்தால்...: வைகோ எச்சரிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உச்ச நீதிமன்றத்தின் உயர்மட்ட அதிகாரக் குழுவான நீதி அரசர் ஆனந்த் தலைமையிலான குழு அறிவித்த ஆய்வுக்காக, தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையில் செங்குத்தாக எட்டு ஆழ்துளைகள் அமைக்கப்பட்டு, மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்தத் துளைகளில் தண்ணீர் தேங்கினால், அணையில் நீர்க்கசிவுக்கும் வலு இழப்பதற்கும் காரணமாகி விடக் கூடாது என்பதால், துளைகளை அடைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சட்டப்படியும், உரிமையின்படியும் தமிழக அரசு இந்தப் பணிகளைச் செய்ய முற்பட்டபோது கேரள அரசின் அதிகாரிகளும், காவல்துறையினரும், அதைச் செய்ய விடாமல் கடந்த சில மாதங்களாகத் தடுத்து வந்தனர்.
கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு 660 கோடி ரூபாய் ஒதுக்கியது மட்டும் அல்லாமல், அணையை உடைப்பதற்கு ஐம்பது கோடி ரூபாயையும் ஒதுக்கி உள்ளது. அதற்காக வெடிமருந்துகளையும் சேகரித்து வைத்து உள்ளது. எனவே, அணையின் ஆய்வுக்குப் போடப்பட்ட துளைகளை அடைக்கவிடாமல் கேரள அரசு முயன்றதில், வஞ்சகமான உள்நோக்கமும், சதியும் உள்ளது என அப்போதே நான் எச்சரித்தேன்.
அணையில் துளைகளை மூடுவதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து கேரள அரசை வற்புறுத்த வேண்டும் என்றும், அந்தக் கடமையைச் செய்யாத நிலையில், தமிழக அரசு காவல்துறையை அனுப்பி, துளைகளை மூடுகின்ற பணிகளில் ஈடுபடும் என்றும் நியாயமான எச்சரிக்கையைத் தெரிவித்து தமிழக முதல்வர், இந்தியத் தலைமை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.
நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை உணர்ந்துகொண்ட கேரள அரசு, தனது எதிர்ப்பில் இருந்து பின்வாங்கியது. இப்போது துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகின்றது. அதற்காக தமிழகத்தில் இருந்து சிமெண்ட் கொண்டு சென்ற லாரிகளை கேரள அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். சிமெண்ட் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி உள்ளனர்.
உயர் தொழில்நுட்பத்தோடு துளைகளை அடைக்கும் வேலை முறையாக நடக்கின்றது. ஆனால் இது அணையைப் பலப்படுத்தும் வேலை என்று சொல்லி, கேரளம் ஆட்சேபிப்பது, அக்கிரமம் ஆகும். ஏனென்றால், நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு, உச்சநீதிமன்றத்துக்குக் கொடுத்து உள்ள அறிக்கையில், 105, 107ஆகிய பக்கங்களில், முல்லைப்பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை, மத்திய நீர்வள ஆணையமே முன்னின்று, தமிழக அரசுசெய்ய வேண்டும் எனத் தெளிவாகக் கூறி உள்ளது.
1886ல் போடப்பட்ட முல்லைப்பெரியாறு ஒப்பந்தத்திலேயே, அணையின் 8000 ஏக்கர் பரப்பில், தமிழகத்துக்கு முழு உரிமை உண்டு என்றும், அணை கட்டும்போதும், பராமரிப்பதற்கும், பொருள்களைக் கொண்டு செல்லவும், திரும்பி வரவும் அனைத்து உரிமைகளும் உண்டு என்றும் சொல்லப்பட்டு உள்ளது.
எனவே, தற்போது துளைகளை அடைக்கும் பணி முழுமையாக நடைபெற தேவையான பொருள்களைத் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்வதைத் தடுக்க கேரள அரசு முயல்வது கண்டனத்துக்கு உரியதாகும்.
எனவே, நமக்கு உரிமை உள்ள அணையில் துளைகளை அடைப்பதற்கும், சேதம் நேராதவாறு பாதுகாத்துக் கொள்வதற்கும், தொடர்ந்து கேரள அரசு முட்டுக்கட்டை போடுமானால், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு, தமிழகக் காவல்துறையை அங்கு அனுப்பி, துளைகளை அடைக்கும் வேலையை நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications