உச்சநீதிமன்றம் அனுமதித்தால் இரண்டே ஆண்டில் புதிய அணை - கேரள அமைச்சர்
கொச்சி: உச்சநீதிமன்றம் அனுமதித்தால் இரண்டே ஆண்டில் முல்லைப் பெரியாறில் புதிய அணையை கேரளாவில் கட்ட முடியும் என்று அம்மாநில அமைச்சர் ஜோசப் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் கேரள பாதுகாப்பு அமைப்பின் சார்பில் முல்லை பெரியாறு அணை பற்றிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கேரள பாசனத்துறை அமைச்சர் ஜோசப், முன்னாள் பாசனத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஜோசப் பேசுகையில், "உச்சநீதிமன்ற உயர்நிலை குழுவின் அறிக்கை ஒருதலைபட்சமாக இருக்கிறது. முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவே உயர்நிலை குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அதனால் இதன் அறிக்கையை உச்சநீதிமன்றம் முழுமையாக பரீசிலிக்க வேண்டியது அவசியம் இல்லை. அந்த அறிக்கையை எதிர்க்க நமக்கு உரிமை உள்ளது.
இந்த அறிக்கை குறித்து ஜூலை 23-ந் தேதி விளக்கம் அளிக்கும்படி தமிழக, கேரள மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கேரள அரசு விளக்கம் அளிக்கும். கேரள தாக்கல் செய்த ஆவணங்களை பரிசீலிக்காமல் ஒருதலைபட்சமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஏற்கமுடியாது.
ஒரு புதிய அணை கட்ட குறைந்தது 10 ஆண்டுகாலம் ஆகும் என்கிறது வல்லுநர் குழு. உச்சநீதிமன்றம் அனுமதித்தால் எங்களால் இரண்டே ஆண்டில் புதிய அணையை கட்ட முடியும் என உறுதியாகக் கூறுகிறோம்," என்றார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications