தமிழகத்தில் மின் உற்பத்திக்கான நீண்டகால திட்டங்கள் இல்லை - மத்திய அரசு குற்றச்சாட்டு

தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீங்கும் வரை, நெய்வேலி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்க தடை கோரி வழக்கறிஞர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தென் மண்டலத்தில் கர்நாடக மாநிலத்தில் அதிக மின் பற்றாக்குறை உள்ளது. அங்கு 18.9 விழுக்காடு மின் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் 17.5 விழுக்காடும் , ஆந்திராவில் 14.8, கேரளாவில் 5.1, புதுச்சேரியில் 4.5 விழுக்காடு மின் பற்றாக்குறையும் உள்ளது.
ஆந்திராவில் 2 ஆயிரத்து 82 மெகாவாட் மின் பற்றாக்குறையாக உள்ளது. கர்நாடகாவில் ஆயிரத்து 996, கேரளாவில் 179, தமிழகத்தில் 2 ஆயிரத்து 247, புதுச்சேரியில் 15 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது.
மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு மாநில அரசுகள் தான் முழுப் பொறுப்பு. மின் உற்பத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகிறது. தமிழகத்தில் மின் பற்றாக்குறைக்கு, மின் உற்பத்திக்கான நீண்டகால திட்டம் இல்லாததே காரணம். தமிழகத்தில் மின் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே, மிகப்பெரிய இடைவெளி உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார்கள் செயல்படுத்தும் 12 மின் உற்பத்தி திட்டங்கள் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.
நெய்வேலியில் 2 ஆயிரத்து 740 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நெய்வேலி முதல் பிரிவில் 600, 2வது பிரிவில் 630, 2வது பிரிவில் 2வது நிலையில் 840, முதல் விரிவாக்கத்தில் 420, 2வது பிரிவு விரிவாக்கத்தில் 250 மெகாவாட் என 2 ஆயிரத்து 740 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் தமிழகத்திற்கு ஆயிரத்து 434 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின் பகிர்வு திட்டங்களை வேகப்படுத்த மத்திய மின் தொகுப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரம் பெறுவது தொடர்பாக மாநில அரசுகளிடமிருந்து வரும் விண்ணப்பங்களை, விதிப்படி பரிசீலித்து அனுமதி வழங்கி வருகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications