பீர் விலை ரூ.10 வரை உயர்வு: 'குடி'மகன்கள் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் 6,804 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு 30,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் கூடுதலாக 108 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கோடை காலத்தில் பீர் தட்டுப்பாடு, டாஸ்மாக் கடைகளில் குளிர்ச்சியில்லாத பீர் அதுவும் அதிக விலைக்கு விற்கின்றனர் என குடிமகன்கள் புகார் கூறினர். இதையடுத்து கடந்த 11ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளில் எந்தெந்த ரகங்களில் என்னென்ன பாட்டில்கள் உள்ளன என்று கடை வாரியாக கணக்கெடுக்கும் பணி நடந்தது. இப்பணி முடிந்ததும் ஒவ்வொரு மதுக்கடைகளிலும் இருந்தும் டாஸ்மாக் பிராந்திய அலுவலர்களுக்கு ஸ்டாக் நிலவரம் தெரிவிக்கப்பட்டது.
பீர் குறைந்தபட்சம் ரூ.65ல் இருந்து ரூ.95க்கு விற்கப்பட்டது. பீர் விலையை உயர்த்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டையா தலைமையில் நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று காலை முதல் பீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.10 வரை விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் காலையில் பீர் வாங்க டாஸ்மாக் கடைகளுக்குச் சென்றவர்கள் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த ஆண்டு 285 லட்சம் சேஸ் பீர் பாட்டில்கள் விற்கப்பட்டன. இந்த ஆண்டு 384 சேஸ் பீர் பாட்டில்கள் விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் இந்த நிதியாண்டில் டாஸ்மாக் பீர் விற்பனையில் மட்டும் சுமார் ரூ.300 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications