அப்துல் கலாமின் அறிவிப்பு வேதனை தருகிறது: மம்தா பானர்ஜி

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
அப்துல் கலாம் நேர்மையானவர்; இளைய தலைமுறைக்கு வழிகாட்டி. யாரும் சந்தேகிக்க முடியாத நேர்மை மற்றும் உயரிய நற்பண்பு கொண்ட, நாட்டிலுள்ள இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் கலாம், ஜனாதிபதியாக வேண்டும் என, மக்கள் விடுத்த அழைப்பை, சில அரசியல் கட்சிகள் நிராகரித்து விட்டன.
ஊழல் மற்றும் மறைமுக பேரத்தில் ஈடுபட்டுவரும் அரசியல்வாதிகள் (முலாயம் சிங்கை சொல்கிறார்?) மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். சில தன்னலமிக்க அரசியல்வாதிகள், நீதிநெறி பிறழ்ந்து மக்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்டனர். நாட்டை இருள் சூழ்ந்துள்ளது. பணம், அதிகாரம், ஊழல் மூலம் பொதுநலம், வாழ்வியல் மதிப்பீடுகள் சமரசத்துக்கு உள்ளாக்கப்பட்டு விட்டன.
எனினும், மக்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் இந்திய அரசியலை தூய்மைப்படுத்தி, நேர்மை, நீதிநெறிகளை மீட்டெடுப்பார்கள். நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி'' என்று மம்தா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications