பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க கிராமம் கிராமமாக மக்களை திரட்டுவேன்: வைகோ
கரூர்: பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை தடுக்க கிராமம் கிராமமாகச் சென்று மக்களை திரட்டுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக சார்பில் செப்டம்பர் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் கரூரில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது,
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு இடுக்கி திட்டம் என்ற பெயரில் ஏழு தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்து வருகிறது. முல்லைப் பெரியாறில் துவங்கி அடுத்தடுத்து தமிழகத்துக்கு கேரளா பல இன்னல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஜூன் 24ம் தேதி முதல் அமராவதி ஆற்றிலிருந்து ஊர் ஊராகச் சென்று மக்களை சந்தித்து, அணை கட்டினால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக் கூறி மக்களை திரட்ட உள்ளேன்.
அணை கட்டினால் கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கும். பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க கிராமம் கிராமமாகச் சென்று மக்களை திரட்டுவேன். கேரளா, கர்நாடகா அரசுகள் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மத்தியில் உள்ள கேரள அரசு அதிகாரிகள் தயாரித்து கொடுத்த அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வந்தால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்று பிரதமர் மன்மோகனிடம் ஏற்கனவே எச்சரித்துள்ளேன் என்றார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications