கட்சி துரகோகிகளை பட்டியலிட்டு கொன்ற விவகாரம்: மாஜி சிபிஎம் நிர்வாகி மணி விரைவில் கைது?
திருவனந்தபுரம்: கட்சி துரோகிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி பட்டியலிட்டு கொலை செய்தது என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் இடுக்கி மாவட்ட முன்னாள் செயலாளர் மணி விரைவில் கைதாவார் என்று தெரிகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இருந்தவர் மணி. கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் கட்சி துரோகிகள் எப்படி பட்டியலிட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பதை தெரிவித்தார். 13 பேரை கொலை செய்ய பட்டியல் போட்டு அதில் 3 பேரை கொன்றுள்ளதாக அவர் கூறினார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து மணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சதிஷ் சந்திரன் முன்னிலையில் விசாரணைககு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கூறுகையில், மணியின் பேச்சு மனசாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், வாழ்வதற்கான உரிமையை தடுக்கும் வகையிலும் உள்ளது. எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்ததில் எந்த தவறும் இல்லை. அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்றார்.
இதையடுத்து மணியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் கேரள போலீசார் இறங்கியுள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications