அமைச்சராக்க விரும்பிய வாஜ்பாய்!.. ஏற்க மறுத்த அப்துல் கலாம்!

இந்தத் தகவல் அப்துல் கலாம் சமீபத்தில் வெளியிட்ட Turning Points: A Journey Through Challenges என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நான் இருந்தபோது 1998ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இரவு வாஜ்பாய் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்துவிட்டேன். உங்களையும் சேர்க்க விரும்புகிறேன் என்று வாஜ்பாய் கூறினார்.
இது குறித்து முடிவெடுக்க எனக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். இதையடுத்து நாளைக் காலை 9 மணிக்கு தன்னை வந்து பார்க்குமாறு வாஜ்பாய் என்னிடம் கூறினார்.
இதையடுத்து நள்ளிரவில் எனது நண்பர்களை வரவழைத்து இதுகுறித்து விவாதித்தேன். நள்ளிரவு 3 மணி வரை ஆலோசித்தோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 2 முக்கிய திட்டங்களில் (அணுகுண்டு, அக்னி ஏவுகணை) நான் முழுமையாக பங்கேற்றிருப்பதால் அதைவிட்டுவிட்டு அரசியலில் நுழையக்கூடாது என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மறுநாள் காலை டெல்லி சப்தர்ஜங் சாலையில் உள்ள பிரதமர் வாஜ்பாயின் வீட்டுக்கு 7 மணிக்கு சென்று அவரிடம, நானும் எனது இரு குழுவினரும் நாட்டுக்கு மிக அவசியமான ஆராய்ச்சிகளில் இருக்கிறோம்.
ஒன்று அக்னி ஏவுகணை, இன்னொன்று அணு குண்டு தயாரிப்பு. நான் அமைச்சராவதை விட இந்தப் பணிகளில் எனது முழு நேரத்தை செலவிடுவதே தேசத்துக்கு அதிக சேவை செய்வதாக இருக்கும் என்றேன். எனவே என்னை தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்றேன்.
இதைக் கேட்ட வாஜ்பாய், உங்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டேன். உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.. உங்கள் ஆராய்ச்சிகளைத் தொடருங்கள். கடவுள் துணை புரியட்டும் என வாழ்த்தி அனுப்பினார் என்று எழுதியுள்ளார் கலாம்.












Click it and Unblock the Notifications