சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால் இளம்பெண் தற்கொலை
நெல்லை: கடையம் அருகே இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வட்டி தொழில் செய்யும் பெண் ஒருவர் தான் பெண் கவுன்சிலர், அதிமுக எம்.எல்.ஏ. ஆதரவாளர் என்று கூறி தன்னை அடிக்கடி சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக அந்த இளம்பெண் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரி்த்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையம் சேர்வைக்காரன்பட்டி மயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் கந்தகுமார். அவரது மனைவி மாலதி.வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று மாலதி திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடு்த்து குடும்பத்தினர் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மாலதி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மாலதி வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், தனது சாவுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண் தான் காரணம் என்றும் அவர் அடிக்கடி தன்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், மேலும் அந்த பெண் தனக்கு அப்பகுதி பெண் கவுன்சிலர் ஒருவரும், அதிமுக எம்.எல்.ஏ. ஒருவரும் ஆதரவாக இருப்பதாகக் கூறி மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அம்பை டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் விசாரணையில் மாலதியின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் மேரி என்பதும், அவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. அவர் தான் மாலதியை அடிக்கடி சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்.
முன்னதாக இது குறி்த்து மாலதி அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் உதவியுடன் மாலதி மேரி மீது கடையம் போலீசில் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மேரி மாலதியை மிரட்டியதாவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications