For Daily Alerts
Just In
தமிழக எதிர்ப்பால் படையினர் வெளியேற்றப்படவில்லையாம்..சொல்கிறது இலங்கை அரசு
கொழும்பு: தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புகளால் இலங்கை விமானப் படையினர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்படவில்லை. என்றும் 2-ம் கட்ட பயிற்சிக்காவே பெங்களூருக்கு அவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி சரத் திசநாயக்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பால் இலங்கை படையினர் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல.. சென்னையில் முதல் கட்ட பயிற்சிகளை அவர்கள் நிறைவு செய்திருக்கின்றனர். இப்பொழுது 2-ம் கட்ட பயிற்சிக்காக பெங்களூருக்கு சென்றுள்ளனர். இதில் அரசியல் நெருக்கடி என்பதற்கான கேள்வியே எழவில்லை என்றர் அவர்.
இதுக்குப் பேர்தான் கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை என்பதோ?
Comments
English summary
The Sri Lankan Ministry of External Affairs dismissed the claims made by the Indian media that the Lankan Airmen sent to South India for training were returning to Sri Lanka due to political pressure from elements in Tamil Nadu.
Story first published: Saturday, July 7, 2012, 11:51 [IST]