தமிழக எதிர்ப்பால் படையினர் வெளியேற்றப்படவில்லையாம்..சொல்கிறது இலங்கை அரசு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புகளால் இலங்கை விமானப் படையினர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்படவில்லை. என்றும் 2-ம் கட்ட பயிற்சிக்காவே பெங்களூருக்கு அவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி சரத் திசநாயக்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பால் இலங்கை படையினர் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல.. சென்னையில் முதல் கட்ட பயிற்சிகளை அவர்கள் நிறைவு செய்திருக்கின்றனர். இப்பொழுது 2-ம் கட்ட பயிற்சிக்காக பெங்களூருக்கு சென்றுள்ளனர். இதில் அரசியல் நெருக்கடி என்பதற்கான கேள்வியே எழவில்லை என்றர் அவர்.
இதுக்குப் பேர்தான் கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை என்பதோ?












Click it and Unblock the Notifications