நாகூர்-திருச்சி ரயில் காரைக்கால் வரை நீட்டிப்பு: துவக்கி வைக்கும் மத்திய அமைச்சர் நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: நாகூர்-திருச்சி பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சென்னை எழும்பூருக்கும், எர்ணாகுளத்திற்கும் (கொச்சி) இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு ரயில்களும் தினமும் ஒரு முறை மட்டுமே இயக்கப்படுவதால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் செல்லும் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.
இதனால் நாகூர்-திருச்சி பயணிகள் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகளும், பொதுமக்களும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நாகூர்-திருச்சி பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த ரயில் போக்குவரத்தை இன்று (ஜூலை 9 ) மத்திய அமைச்சர் நாராயணசாமி துவக்கி வைக்கின்றார்.












Click it and Unblock the Notifications