''கோத்ரா ரயில் எரிப்பு: வாஜ்பாய்- நாராயணன் இடையிலான கடிதங்களை வெளியிட தேவையில்லை''
டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு பிரதமராக இருந்த வாஜ்பாய் மற்றும் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் ஆகியோருக்கு இடையேயான கடிதப் பரிமாற்றங்களை பகிரங்கப்படுத்த முடியாது என்ற மத்திய அரசின் முடிவு சரியானதே என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சி. ரமேஷ் என்பவர் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பின்னர் பிரதமர் வாஜ்பாய்க்கும் அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணனுக்கும் இடையேயான கடிதப் பரிமாற்றங்களை கோரியிருந்தார். ஆனால் மத்திய அரசு இந்தக் கடிதப் பரிமாற்றங்களை தர மறுத்துவிட்டது. இதையடுத்து மத்திய தகவல் ஆணையரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டது. ரமேஷின் மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம் கடந்த 2006-ம் ஆண்டு, கடிதப் பரிமாற்றங்களை மனுதாரருக்குக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு செய்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி அனில்குமார், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடைவிதித்தது. மேலும் வாஜ்பாய்- கே.ஆர். நாராயணன் இடையேயான கடிதங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் கருதி வெளியிடத் தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவு சரி என்றும் நீதிபதி தெரிவித்தார். இதேபோல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைக் கோரிய ரமேஷின் மனுவையும் நீதிபதி தள்ளுபை செய்து உத்தரவிட்டார்.
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டுமா?- ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications