லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல சுரேஷ் கல்மாடிக்கு நீதிமன்றம் அனுமதி

கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் சுரேஷ் கல்மாடி மற்றும் 10 பேர், ரூ.90 கோடி ஊழலில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் லண்டனில் இந்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல சுரேஷ் கல்மாடி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சர்வதேச தடகள சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில், நான் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை சிறப்பு சி.பி.ஐ நீதிபதி தல்வந்ட் சிங் விசாரித்தார். இதற்கு எதிர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் சுரேஷ் கல்மாடியின் கோரிக்கை ஏற்று ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு அளித்தார்.
இது குறித்து நீதிபதி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,
மனுதாரர் (சுரேஷ் கல்மாடி) சர்வதேச தடகள சங்கத்தின் உறுப்பினர், ஆசிய தடகள சங்கத்தின் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்து வருகிறார். எனவே லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது மேற்கண்ட சங்கங்களின் கூட்டங்களில், சுரேஷ் கல்மாடி கலந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சென்று வர மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications