காங்கயம் அருகே காமராஜர் விழாவுக்குச் சென்ற பள்ளி மாணவி பலி: 9 பேர் படுகாயம்
திருப்பூர்: காங்கயம் அருகே படியூரில் பள்ளி மாணவ மாணவிகள் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவி ஒருவர் பரிதாபமாகப் பலியானார். மேலும் ஒன்பது மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி கல்வி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் படியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி தின விழா கொண்டாட அனைத்து மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது. இந்த விழாவுக்காக படியூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கந்தம்பாளையம் கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகள் 10 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.
அப்போது ஆட்டோ படியூர் நோக்கி சென்றபோது சாலையில் திருப்பம் ஒன்றில் திரும்புகையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 10 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ஏழாம் வகுப்பு மாணவி மோகனா தேவி (12) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த கார்லின் (13), சிவகார்த்திக் (13), காந்திமதி (13) ஆகிய மூன்று பேர் மேல் சிகிசைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செளமியா (12) என்ற மாணவி திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேலும் கோகுல் (14), சௌந்தர்யா (12), லோகேஸ்வரி (12), அஜீத்குமார் (13), குமார் (12) ஆகிய 5 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், மாவட்ட கலெக்டர் எம்.மதிவாணன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்த மாணவ, மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
கந்தம்பாளையம் பகுதியில் இருந்து படியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் அங்கிருந்து படியூர், காங்கயம் பகுதிகளுக்குப் பேருந்து வசதி இல்லை என்பதால் தான் அவர்கள் இது போன்ற ஆட்டோக்கள் மூலம் பள்ளி சென்று வருவதாகக் கூறப்படுகின்றது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications