சிவகிரி ஜமீன் சொத்து விவகாரத்தில் இண்டர்போல் உதவியை நாடுகிறது சிபிசிஐடி
சென்னை: சிவகிரி ஜமீன் சொத்து விவகாரம் தொடர்பாக இண்டர்போல் உதவியை நாட முடிவு செய்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிவகிரி ஜமீன் வாரிசுதாரர் என்று கூறி என். ஜெகநாதனுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகார கடிதத்தை ரத்து செய்து 2008-ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த அங்கீகார கடிதத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் திருப்பி ஒப்படைக்கவில்லை. அங்கீகார கடிதத்தை ரத்து செய்ததை எதிர்த்து ஜெகநாதன் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களையும் சேர்க்கக் கோரி சிவகிரி ஜமீனின் உண்மையான வாரிசுதாரர்கள் 126 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜெகநாதன் மற்றும் அவரது வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆகியோரிடம் நீதிபதிகள், எதிர்தரப்பினர் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது வழக்கறிஞர் சொக்கலிங்கம், அங்கீகாரக் கடிதம் சுவிஸ் வங்கியில் இருக்கிறது என்று கூறினார். மேலும் வாரிசுதாரர் என்று கூறப்பட்ட ஜெகநாதன் மூலமாக சொத்து விற்பனைக்கு முயற்சி மேற்கொண்டதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான இன்பதுரை, சிவகிரி ஜமீன் சொத்து விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. ஜெகநாதனிடம் இருந்து சிவகிரி ஜமீன் சொத்துகளுக்கு வாரிசு என உரிமை பெற்றுள்ள கசினா அவரது மனைவி மாயா ஆகியோர் தற்போது சுவிட்சர்லாந்தில் இருக்கின்றனர். அவர்களை விசாரிக்க வேண்டியிருக்கிறது. மேலும் சுவிஸ் வங்கி, சிண்டிகேட் வங்கிகளுக்கும் சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் சர்வதேச போலீஸின் உதவியையும் நாட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்றார்.
இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 23-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications