புனே குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாஹிதீனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள்
புனே: புனேவில் அடுத்தடு்தது 4 இடங்களில் வெடிகுண்டு வெடித்ததன் பின்னணியில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த 1ம் தேதி இரவு அடுத்தடுத்து 4 இடங்களில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் காயம் அடைந்தார். உயிரிழப்பு எதுவுமில்லை. மேலும் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றைய விசாரணையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய கைக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு தான் கைக்கடிகாரத்தை பயன்படுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்யும்.
இது தவிர இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த காதீல் அகமது சித்திகியின் மரணத்திற்கு பழி வாங்குவோம் என்று அந்த அமைப்பினர் கடிதம் அனுப்பியதாக புனே போலீசார் தெரிவித்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்திகி கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததால் போலீசார் 9 சைக்கிள் வினியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் சுஜ்த் தேஷ்முக் என்பவர் கடந்த புதன்கிழமை 3 சைக்கிள்களை விற்பனை செய்துள்ளார். அந்த சைக்கிள்களில் தான் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
போலீசாரிடம் தேஷ்மக் கூறுகையில், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகள் பேசிய இருவர் வந்து சைக்கிள்கள் வாங்கினார்கள் என்றார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் அந்த இருவரின் படத்தை வரைந்துள்ளனர். அவர்களுக்கு 25 முதல் 30 வயது வரை இருக்கும் என்று தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் காயமடைந்த தயானந்த் பாட்டீலிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். அவரை குற்றவாளியாக பார்க்காவிட்டாலும், அவரது பைக்குள் எப்படி குண்டுகள் வந்தது என்று விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பாட்டீலின் மனைவி சத்யகலாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அம்மோனியம் நைட்ரேட்டுடன் நியோஜெல் சேர்த்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. குண்டு வெடித்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளில் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று போலீசார் பார்த்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications