கிணற்றுக்குள் கார் பாய்ந்து சாப்ட்வேர் என்ஜினீயர் பலி- மனைவி, மகள் காயத்துடன் மீட்பு
திண்டுக்கல்: பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் சிவனேசன் குடும்பத்துடன் காரில் வந்து போது, திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் சிவனேசன் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பலியானார். அவரது மனைவி மற்றும் மகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் சந்திரமோகன். ஜவுளிக்கடை அதிபரான இவரது மகன் சிவனேசன்(33). சாப்ட்வேர் என்ஜினீரான இவர், பெங்களூரில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சிவனேசனின் தங்கை திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்வதற்காக, குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
காரை சிவனேசன் ஓட்ட, பின்னால் இருக்கையில் அவரது மனைவி ரோகிணி(30) மற்றும் மகள் அஸ்வினி(2) ஆகியோர் இருந்தனர். திண்டுக்கலை கடந்து, கொடைரோடு வழியாக கார் வத்தலக்குண்டு நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு 10 மணி அளவில் வத்தலக்குண்டு அடுத்த பூசாரிபட்டி பிரிவை அடைந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
சாலையில் தாறுமாறாக ஓடிய கார், சாலையோரத்தில் இருந்த 50 அடி ஆழம் கொண்ட தரைமட்ட கிணற்றில் விழுந்தது. கிணற்றில் 15 அடிக்கு தண்ணீர் இருந்ததால், கார் மெதுவாக மூழ்கியது. இதில் காரை ஓட்டி சென்ற சிவனேசன் மூச்சு திணறி பலியானார்.
ரோகிணி, குழந்தை அஸ்வினுடன் சேர்ந்து உயிரை காப்பாற்ற அலறினார். ஆனால் இரவு நேரம் என்பதாலும், கிணறு ஆழமானது என்பதாலும் ரோகிணியின் சத்தம் வெளியே கேட்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அவ்வழியாக சென்றவர்கள், கிணற்றில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு, எட்டி பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் கார் கிடப்பதை கண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரோஹினியும், குழந்தை அஸ்வினியும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கிரேன் மூலம் கார் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.கிணற்றில் நீரில் மூழ்கி இழந்த சிவநேசனின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications