கிணற்றுக்குள் கார் பாய்ந்து சாப்ட்வேர் என்ஜினீயர் பலி- மனைவி, மகள் காயத்துடன் மீட்பு
திண்டுக்கல்: பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் சிவனேசன் குடும்பத்துடன் காரில் வந்து போது, திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் சிவனேசன் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பலியானார். அவரது மனைவி மற்றும் மகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் சந்திரமோகன். ஜவுளிக்கடை அதிபரான இவரது மகன் சிவனேசன்(33). சாப்ட்வேர் என்ஜினீரான இவர், பெங்களூரில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சிவனேசனின் தங்கை திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்வதற்காக, குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
காரை சிவனேசன் ஓட்ட, பின்னால் இருக்கையில் அவரது மனைவி ரோகிணி(30) மற்றும் மகள் அஸ்வினி(2) ஆகியோர் இருந்தனர். திண்டுக்கலை கடந்து, கொடைரோடு வழியாக கார் வத்தலக்குண்டு நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு 10 மணி அளவில் வத்தலக்குண்டு அடுத்த பூசாரிபட்டி பிரிவை அடைந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
சாலையில் தாறுமாறாக ஓடிய கார், சாலையோரத்தில் இருந்த 50 அடி ஆழம் கொண்ட தரைமட்ட கிணற்றில் விழுந்தது. கிணற்றில் 15 அடிக்கு தண்ணீர் இருந்ததால், கார் மெதுவாக மூழ்கியது. இதில் காரை ஓட்டி சென்ற சிவனேசன் மூச்சு திணறி பலியானார்.
ரோகிணி, குழந்தை அஸ்வினுடன் சேர்ந்து உயிரை காப்பாற்ற அலறினார். ஆனால் இரவு நேரம் என்பதாலும், கிணறு ஆழமானது என்பதாலும் ரோகிணியின் சத்தம் வெளியே கேட்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அவ்வழியாக சென்றவர்கள், கிணற்றில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு, எட்டி பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் கார் கிடப்பதை கண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரோஹினியும், குழந்தை அஸ்வினியும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கிரேன் மூலம் கார் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.கிணற்றில் நீரில் மூழ்கி இழந்த சிவநேசனின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications