For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரானுக்கு அணு ஆயுத கருவிகள் அனுப்ப முயன்ற 4 ஜெர்மனியர்கள் கைது

By Chakra
Google Oneindia Tamil News

ஹாம்பர்க்: ஈரானுக்கு அணு ஆயுத தொழில்நுட்பம் தொடர்பான கருவிகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற 4 பேரை ஜெர்மனி கைது செய்துள்ளது.

கைதான மூன்று பேர் ஜெர்மானியர்கள், ஒருவர் ஈரான்-ஜெர்மனி இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர் ஆவார்.

ஈரானுக்கு இந்தக் கருவிகளை இவர்கள் அனுப்பத் திட்டமிட்டது குறித்து அமெரிக்க உளவுப் பிரிவினர் அளித்த தகவலையடுத்து, ஹாம்பர்க், ஓடென்பர்க், வெய்மர் ஆகிய நகர்களில் வீடுகள், அலுவலகங்களில் ஜெர்மனியின் சுங்கத்துறையினரும் போலீசாரும் ரெய்டு நடத்தி இவர்களைக் கைது செய்தனர்.

அணு உலைக்குத் தேவையான கனநீரைத் தயாரிக்கத் தேவையான சுமார் 7 மில்லியன் யூரோ மதிப்புள்ள கருவிகள், வால்வுகளை இவர்கள் ஈரானுக்கு துருக்கி மற்றும் அஸர்பைஜான் நாடுகள் வழியாக அனுப்ப இருந்ததாகத் தெரிகிறது. ஏற்கனவே இவர்கள் சில கருவிகளை ஈராணுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் தெரிகிறது.

ஈரானிய அணு உலைகள் மீது அடுத்த 30 நாட்களுக்கு தொடர் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக செய்திகள் பரவியுள்ள நிலையில், ஜெர்மனியின் இந்தக் கைதுகள் அரங்கேறியுள்ளன.

English summary
Raids across Germany have seen four men arrested in an operation aimed at thwarting illegal exports of nuclear technology to Iran. Some 90 customs officers backed up by armed police raided homes and offices in Hamburg, Oldenburg and Weimar. In custody by Wednesday afternoon were three Germans and a man with dual Iranian-German citizenship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X