காற்றாலைகளில் சீரான மின் உற்பத்தி இல்லை-தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தடை - மக்கள் அவதி

தமிழகத்தில் மின் தேவை தினமும் 13 ஆயிரம் மெகா வாட் உள்ள நிலையில் அதற்கேற்ற மின் உற்பத்தி இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடும் மின்வெட்டு நீடிக்கிறது.
தென்மேற்கு பருவ காற்று வீசியதால் நெல்லை, ஈரோடு மண்டலங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் கடந்த 2 மாதங்களாக 2,500 மெகா வாட் குறையாமல் மின்சாரம் உற்பத்தியானது. இதன் காரணமாக மின் வாரியத்தினர், மின் தேவையை ஒரளவுக்கு சமாளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் 3 நாட்களாக 800 முதல் 900 மெகா வாட் மட்டுமே மின் உற்பத்தி ஆகி வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலானது. பகலில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் மின் தடை ஏற்படுத்தி, தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மின் உற்பத்தி அளவும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று நெல்லை மண்டலத்தில் 1700 மெகாவாட்டும், ஈரோடு மண்டலத்தில் 750 மெகா வாட் என்று மொத்தம் 2450 மெகா வாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்தது.
இன்று அதிகாலை 6 மணி நிலவரப்படி இரு மண்டலங்களிலும் சேர்ந்து மேலும் 2424 மெகா வாட் மின்சாரம் காற்றாலைகளில் உற்பத்தியானது. இதில் நெல்லை மண்டலத்தில் மட்டும் 1611 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. இதனால் 3 மணி நேர இடைவிடாத தொடர் மின்தடை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி தொடரும் பட்சத்தில், மின் தட்டுபாட்டை சமாளிக்க முடியும் என்று மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications