இன்று ரம்ஜான்... வரலாறு காணாத பலத்த பாதுகாப்பில் பெங்களூர்!
இந்தியாவின் சில பகுதிளில் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் இன்றுதான் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையி்ல் பெங்களூரில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி கூறுகையில், மொத்தம் 17,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் மத்திய ரிசர்வ் போலீஸார், ரேபிட் ஆக்ஷன் போர்ஸ், கர்நாடக சிறப்புப் போலீஸார் உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டமான பகுதிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் ரம்ஜான் பண்டிகைக்கு இதுவரை இவ்வளவு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதில்லை. இப்போதுதான் முதல்முறையாக செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பெங்களூரை விட்டும், கர்நாடகத்தை விட்டும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது காவல்துறை.