விமானத்தில் பெண்ணுக்கு வலிப்பு: லண்டன் விமானம் சென்னையில் தரையிறங்கியது!
சென்னை: விமானத்தில் பெண் பயணிக்கு வலிப்பு ஏற்பட்டதால் லண்டன் செல்லும் ஆஸ்திரேலிய விமானம் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அபுதாபி வழியாக லண்டனுக்கு 160 பயணிகளுடன் ஆஸ்திரேலிய நாட்டு விமானம் சென்று கொண்டிருந்தது.
நேற்று நள்ளிரவு 11 மணியளவில் அந்த விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது சிட்னியை சேர்ந்த ஒஸ்மின் (26) என்ற பெண் பயணிக்கு வலிப்பு ஏற்பட்டு இருக்கையில் இருந்து கீழே விழுந்து துடித்தார்.
இதையடுத்து விமானிகள் உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அதிகாரிகள் அனுமதித்தனர்.
விமானம் தரை இறங்கியதும் டாக்டர்கள் குழுவினர் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளித்தனர். அந்த பெண்ணுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் தாற்காலிக விசாவை குடியுரிமை அதிகாரிகள் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் 11.15 மணிக்கு தரை இறங்கிய விமான நள்ளிரவு 1.30 மணிக்கு அபுதாபி புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications