மண் குவாரி மோசடி... மகனுடன் பொன்முடி தலைமறைவு: சென்னை விரைந்தது தனிப்படை!

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாசில்தார் குமாரபாலன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, செம்மண் குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக செம்மண் அள்ளிதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் அந்த புகாரில் கூறியதாவது,
வானூர் தாலுகா, பூத்துறை கிராமத்தில் 5 செம்மண் குவாரிகள், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, விழுப்புரம் அருகே உள்ள பள்ளியந்தூர் ஜெயச்சந்திரன், கவுதசிகாமணியின் மைத்துனர் ராஜமகேந்திரன் ஆகியோர் பெயர்களில் உரிமம் பெற்று நடைபெற்று வருகிறது.
இந்த குவாரிகளில் 20 அடி வரை தோண்டி செம்மண் அள்ளிக் கொள்ள அரசு அனுமதித்தது. ஆனால் அரசு அனுமதித்த அளவை மீறி சுமார் 70 அடி வரை தோண்டப்பட்டு செம்மண் அள்ளப்பட்டுள்ளது. எனவே அரசிற்கு இழப்பீடு ஏற்படும் வகையில் ரூ.28 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள 2 லட்சத்து 46 ஆயிரம் யூனிட் அளவுள்ள செம்மண் அள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, பள்ளியந்தூர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகிய 4 பேர் உட்பட பலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 353 (அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல்), 506(1) மிரட்டுதல்), 406 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றுதல்), 379 (திருட்டு), 120(பி) (கூட்டு சதி) மற்றும் கனிமவள தடை சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்தனர்.
இவ்வழக்குகள் தொடர்பாக பள்ளியந்தூர் ஜெயச்சந்திரனை, போலீசார் கைது செய்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செம்மண் மோசடி வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட 3 பேரை பிடிக்க மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், விழுப்புரம் நிலமோசடி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் 3 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தலைமறைவு?
இதையடுத்து பொன்முடியும், அவரது மகனும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் சென்னையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படையினர் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
பொன்முடி மீதான இந்தப் புதிய வழக்கு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்












Click it and Unblock the Notifications