காவிரி நீர் விவகாரம்: ஓசூரிலிருந்து கர்நாடகத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தம்

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கன்னட அமைப்புகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கன்னட அமைப்புகளின் இந்தப் போராட்டத்தில் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் கர்நாடகம் செல்லும் தமிழகப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவது குறித்து கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் திடீரென ஆளுநர் பரத்வாஜை கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஓசூரிலிருந்து கர்நாடகம் செல்லும் அனைத்து தமிழக பேருந்துகளும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். கர்நாடக மாநிலத்தில் இயல்பு நிலைமை திரும்பியதும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக- கர்நாடக எல்லையான ஓசூரில் பதற்றம் நிலவி வருவதால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டும் உள்ளனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications