செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம்!!
சென்னை: தமிழ்நாட்டில் செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட போராட்ட மனோபாவம் செத்துப்போய், இம்சையோடு வாழப் பழகிக் கொண்டு வருகிறார்கள் மக்கள். சிலர் துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பதுபோல, இந்த மின் வெட்டு துயரை காமெடியாகப் பார்த்து வருகின்றனர்.
இந் நிலையில், 1747-ல் பிறந்த மின்சாரம் தமிழகத்தில் மட்டும் செத்துப் போனதாகவும், அதற்கு வரும் திங்கள் கிழமை காலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாகவும் இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
'உண்மையிலேயே இப்படி ஒரு போராட்டத்தை நடத்தப் போகிறார்களா.. அல்லது பேஸ்புக்கில் கமெண்ட்டுகளை வாரிக் குவிக்க மட்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்களா என்பது திங்களன்று காலைதான் தெரியவரும்'. இது இந்த அறிவிப்பைப் பார்த்ததும் பிற கட்சியினர் அடித்த கமெண்ட்!












Click it and Unblock the Notifications