கர்நாடகம் கைவிரித்தாலும் கனமழை கை கொடுக்க மேட்டூர் அணை நீர்மட்டம் உயருகிறது!

Subscribe to Oneindia Tamil

Mettur dam
மேட்டூர்: காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட மறுத்துவிட்ட நிலையில் கனமழைதான் இப்பொழுது கை கொடுத்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி பாசன பகுதிகளில் மழை பெய்துவருவதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவது கணிசமாகக் குறைக்கப்ப்ட்டு விட்டது. இதனாலும் மழை தொடருவதாலும் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. 62.87 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 63.30 அடியாக உயர்ந்தது.

இதேபோல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 121 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1907 கன அடி தண்ணீர் வருகிறது. 1,134 கன அடி தண்ணீர் வெளியேறியது. வைகை அணையின் நீர்மட்டம் 42.91 அடியாக உள்ளது. அணைக்கு 1,549 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 60 கன அடி தண்ணீர் வெளியேறியது.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 2 அடிக்கு மேல் உயர்ந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 3.20 அடி உயர்ந்தது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா அணை நிரம்பி வழிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+