சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ஃபஷி முகமது டெல்லியில் கைது

மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றம்சாட்டப்பட்ட அபுஜிண்டாலை சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம் சவூதி அரேபியா ஒப்படைத்திருந்தது. அப்போதேஃபஷி முகமது பற்றிய சர்ச்சையும் எழுந்தது. பெங்களூர் சின்னசாமி மைதானம் மற்றும் டெல்லி ஜூம்மா மசூதி குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பஷி ஏற்கெனவே நாடு கடத்தப்பட்டுவிட்டதாகவும் டெல்லியில் போலீசார் கஸ்டடியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக ஃபஷி முகமதுவின் குடும்பத்தார் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சவூதி அரேபியாவில் இருந்து இன்று ஃபஷி முகமது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் டெல்லி விமான நிலையத்திலேயே பஷிமுகமது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தபட்டதாகவும் கூறப்படுகிறது. ஃபஷி முகமது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதை சவூதி அரேபியாவும் உறுதி செய்திருக்கிறது.
பீகாரைச் சேர்ந்த ஃபஷி முகமது ஒரு என்ஜினியர் என்றும் தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications