பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற வாலிபர்- தாக்குதலில் சிக்கி பலி!

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றவர்கள் மீது நடந்த தாக்குதலில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

பரமக்குடியை அடுத்த வேலங்குடியில் இருந்து ஏராளமானோர் ஒரு வாகனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போது அவர்கள் பரமக்குடியை அடுத்த பாம்புவிழுந்தான் என்ற கிராமத்திற்கு வழி தவறி சென்றுவிட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த வாகனத்தை வழிமறித்து அதில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதில் சிவக்குமார்(27) என்ற வாலிபர் பரிதாபமாக பலியானார்.

தாக்குதலில் இருந்து தப்பித்தவர்கள் பரமக்குடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+