நிலம் புயலால் நெய்வேலியில் மின்சார உற்பத்தி பாதிப்பு
Subscribe to Oneindia Tamil

நிலம் புயல் மற்றும் பருவமழையின் காரணமாக நெய்வேலி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேங்கிய மழை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி 800 மெகாவாட் குறைந்துள்ளதாக அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பராமரிப்பு பணிக்காகவும் 2 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications