தவறுதலான ஒளிபரப்பு: பிபிசி பொது இயக்குனர் ராஜினாமா
லண்டன்: பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் பொது இயக்குனர் ஜார்ஜ் எண்ட்விஸ்டில் சர்ச்சையில் சிக்கி தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டின் அரசியல்வாதி ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுக்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
லண்டனில் உள்ள பி.பி.சி. ஒளிபரப்பு நிலைய தலைமையகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், 23 வருட அனுபவத்துடன் பி.பி.சி.யின் தயாரிப்பாளராகவும், தலைவராகவும் நான் நியமனம் செய்யப்பட்ட போது, எதிர்கால வாய்ப்புகளையும், சவால்களையும் கையாளக்கூடிய சரியான நபராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனினும், கடந்த சில வாரங்களாக நிகழ்ந்த சம்பவங்கள் பி.பி.சி. நிறுவனம் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று நான் முடிவு எடுப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications