தர்மபுரி ஜாதி கலவர பகுதியில் குடிபோதையில் ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்-எஸ்பி அதிரடி
தர்மபுரி: தர்மபுரியில் ஜாதிக் கலவரம் நடந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் குடிபோதையில் இருந்ததையடுத்து அவரை சேலம் சரக டி.ஐ.ஜிக்கு சஞ்சய்குமார் மூலம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி. அஸ்ரா கர்க்.
தர்மபுரி நத்தம் காலனியில் இரு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டதையடுத்து ஒரு தலித் கிராமமே தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் எஸ்.பி. அஸ்ரா கர்க் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு நாட்களுக்கு முன் இரவில் கம்புநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எஸ்.பி. அஸ்ரா கர்க் மைக்கில், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் மைக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அஸ்ரா கர்க் அந்தப் பகுதிக்கு வந்தார்.
அப்போது எதிரே இன்ஸ்பெக்டரின் ஜீப் வந்தது. அதை எஸ்.பி நிறுத்தினார். அப்போது டிரைவர் இல்லாமல் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனே தனியாக ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தார்.
அவரை எஸ்.பி. நெருங்கியபோது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து எஸ்பி. அஸ்ரா கர்க் மைக்கிலேயே தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து போலீசாரிடமும் பேசினார். ''தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால், பாதுகாப்புக்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் குடிபோதையில் இருக்கிறார். எனவே அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப் போகிறேன். யார் தவறு செய்தாலும் இதே நிலை தான்'' என்று ஓபன் மைக்கிலேயே எச்சரித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் பெரும் குடிபோதையில் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்து சான்றிதழும் தந்தனர்.
இதை அஸ்ரா கர்க், சேலம் சரக டி.ஐ.ஜிக்கு சஞ்சய்குமாருக்கு அனுப்ப, உடனடியாக அவர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு இன்று அதிகாலை 4 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.
மதுரையில் ஓவர் ஆட்டம் போட்டு வந்த மத்திய அமைச்சர் அழகிரியின் ஆட்களை ஒடுக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் அஸ்ரா கர்க் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications