துபாய், லண்டன், நியூயார்க் இந்திய தூதரகங்களில் விரைவில் சிபிஐக்கு தனி அதிகாரிகள்!

இந்தியர்கள், இந்தியா தொடர்புடைய ஊழல்கள், கிரிமினல் வழக்குகளில் இந்த நாடுகளில் இருந்து ஏராளமான தகவல்கள் சிபிஐக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், இதை தூதரகங்களில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகளால் பெற முடியவில்லை. இதனால், இந்த நாடுகளில் தனக்குத் தேவையான தொடர்பு அதிகாரிகளை சிபிஐயே நேரடியாக நியமிக்கவுள்ளது. இவர்கள் தூதரகங்களில் இருந்த வண்ணம் சிபிஐக்காக பணியாற்றுவர்.
2ஜி, ராணுவத்துக்கு வாகனங்கள் வாங்கியதில் நடந்த டட்ரா ஊழல், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம், சத்யம் கம்ப்யூட்டர் ஊழல், அபிஷேக் வர்மாவின் ஆயுத பேர ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து விளக்கங்கள் கோரி இந்திய நீதிமன்றங்கள், ரா, ஐபி, சிபிஐ, போலீசார், மத்திய அரசு ஆகிய அமைப்புகள் அனுப்பிய கடிதங்களுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.
கிட்டத்தட்ட 250 இந்திய கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்கவில்லை. இதனால், இந்த வழக்குகளும் விசாரணைகளும் அப்படியே தேங்கி வருகின்றன. இந் நிலையில் தான் தனக்கென தனி அதிகாரிகளை நியமித்து, அந் நாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் நேரடியாகப் பேசி விவரங்களை வாங்க சிபிஐ கருதுகிறது.
இதற்காகவே, இந்த தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனங்களுக்கு துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துவிட்டன. இதையடுத்து டிஐஜி பதவிக்குரிய அதிகாரத்தில் இந்த அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
அதே போல இந்தியாவில் நடந்த ஊழல்களில் ஐசில் ஆப் மேன் தீவுகள், மொரீசியஸ், மலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிடம் இருந்தும் சிபிஐக்கு ஏராளமான தகவல்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications