எஸ்.சி/எஸ்.டியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு- ராஜ்யசபாவில் மசோதா மீது இன்று வாக்கெடுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மீது இன்று ராஜ்யசபாவில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மத்திய அரசை ஆதரித்தது. இதற்கு பேரமாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றும் உறுதிமொழியைப் பெற்றார் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி.

இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டபோது, சமாஜ்வாடி கட்சியினர் கடும் ரகளையில் ஈடுபட்டு அமளியை உருவாக்கினர். இருப்பினும் பெரும்பாலான கட்சிகள் இந்த மசோதாவை ஆதரித்தே கருத்து தெரிவித்திருக்கின்றன. மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இந்த பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்பதை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்றைய மசோதாவுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி வாக்களிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+