பலாத்கார சம்பவம் தொடர்பாக இளைஞர்களின் கோபம் நியாயமானது- வன்முறை தீர்வு அல்ல: பிரணாப்

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரணாப் முகர்ஜி, டெல்லியில் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த துணிச்சல்மிக்க இளம்பெண் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாணவி பலாத்கார வழக்கில் அரசு தேவையன நடடிவடிக்கை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக இளைஞர்கள் கோபத்தை வெளிப்படுத்துவது நியாயமானது. பாராட்டுக்குரியது. ஆனால் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதுதான் தீர்வாகாது.
இந்த வன்முறையில் ஒரு போலீசார் உயிரிழந்திருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த போலீசாரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளைஞர்கள் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாது என்று ந்ம்புகிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications