இலங்கை: சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்க 27 பேர் ஜாமினில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
திருகோணமலை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 27 பேரையும் ஜாமினில் விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் துறைமுக போலீசாரிடம் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் அனைவரையும் விடுவிக்கக் கோரி நாகை மீனவர்கள் வேலை நிறுத்தப்ப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனைவரும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரையும் தலா ரூ1 லட்சம் ஜாமினில் விடுவிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications