டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் சாவு சர்ச்சை: கிரைம் பிராஞ்ச் விசாரணை!
டெல்லி: டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் மரணத்தில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது குறித்த விசாரணை க்ரைம் பிராஞ்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் காயமடைந்த போலீஸ்காரர் சுபாஷ் தோமர் செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
போராட்டக்காரர்கள் தாக்கியதில் கழுத்து, நெஞ்சு, வயிறு பகுதிகளில் தோமருக்கு காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்ததில் தோமர் காயமடைந்ததாகவும் யாரும் அவரை தாக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதனால்தான் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு டெல்லி போலீசின் க்ரைம் பிராஞ்ச் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்தார்.
இதனிடையே, இறந்த போலீஸ்காரர் சுபாஷ் தோமரின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications