ஈரான் சிறையில் இந்திய மீனவர்கள்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது:

தமிழக மற்றும் கேரள மீனவர்கள் 29 பேர் எல்லைத் தாண்டி மீன்பிடித்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு கடந்த 50 நாட்களாக ஈரானில் ஈகிள்ஸ் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்கள் சொல்லொனாத் துயரத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் உணவு உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் இவ்வாறு அன்னிய நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள அவர்களது குடும்பத்தார் கண்ணீருடன் வாழ்வதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

ஈரானில் உள்ள சிறைத் துறை அதிகாரிகள், மீனவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. அங்குள்ள நாடாளுமன்றக் குழு உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், சிறையில் உள்ள மீனவர்களின் நிலை குறித்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கடிதத்தின் மூலம் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+