சென்னை, பெங்களூரில் ஏர்போர்ட் மாதிரி 'ஹெலிபோர்ட்'
சென்னை: சென்னை மற்றும் பெங்களூரில் விரைவில் பவான் ஹன்ஸ் நிறுவனம் சார்பில் ஹெலிபோர்ட் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஹெலிகாப்டர்கள் மட்ட்மே இறங்கி, புறப்பட்டுச் செல்லும்.
நகரங்களில் அதிகரித்து வரும் நெரிசலால் தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நினைத்த நேரத்தில் ஹெலிகாப்டரை கிளப்பி நினைத்த இடத்தில் இறங்க முடியாது. விமான போக்குவரத்து துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற பிறகுதான் ஹெலிகாப்டர்களை கிளப்ப முடியும்.
இதற்கு தீர்வாகத்தான் ஹெலிகாப்டர்கள் மட்டுமே இறங்கும், புறப்படும் பிரத்யேக, "ஹெலிபோர்ட்'களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் முதல் கட்டமாகவும் சென்னை, கொல்கத்தா, லக்னோ நகரங்களில் அடுத்த கட்டமாகவும் ஹெலிபோர்ட்டுகள் அமைக்கப்பட இருக்கின்றன.












Click it and Unblock the Notifications