கூடங்குளம் அணுஉலையில் கசிவு? - பீதியில் தென் மாவட்ட மக்கள்

கூடங்குளம் அணுஉலையில் பாதுகாப்பு பிரச்சினை குறித்து கடந்த சில மாதங்களாக மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது. அணு உலையிலிருந்து அணுக் கதிர் வீச்சு வெளிப்படுவதாகவும், அடிக்கடி கசிவு ஏற்படுவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன.
நிபுணர்கள் குழுவோ சரியான விளக்கம் சொல்லாமல் சமாளித்து வருகின்றனர். அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு கேட்ட வெள்ளை அறிக்கையையும் தர முடியவில்லை அணு உலை நிர்வாகத்தால்.
இந்த நிலையில் குமரி மாவட்ட பொதுமக்கள் சிலரின் செல்போனுக்கு நேற்றிரவு ஒரு எஸ்.எம்.எஸ். தகவல் வந்தது.
அதில் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் இன்று இரவு மின்உற்பத்தி சோதனை செய்யப்படுகிறது. இதனால் அணு உலையில் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த எஸ்.எம்.எஸ். தகவல் குமரி மாவட்ட பொது மக்களிடையே வேகமாக பரவியது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை வெளியே எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்தனர்.
குறிப்பாக மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட கடற்கரை பகுதி பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை வெளியே எடுத்து வந்து விட்டனர்.
மேலும் அணு உலையால் விபத்து ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறி விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.
இந்த நிலையில் அடுத்து நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குளி, பெருமணல் பகுதி பொதுமக்களுக்கு நேற்றிரவு செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ்.வந்தது.
அதில், 'அணு உலைக்கு கொண்டு வரப்பட்ட முக்கியமான பொருளில் தீ விபத்து ஏற்பட்டு 40 பேர் வரை பலியாகி விட்டனர்' என்று கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொது மக்கள் வீட்டை விட்டே வெளியேறினர். அவர்கள் நேற்றிரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய தவித்தனர்.
இன்று காலை செல்போனில் பரவிய எஸ்.எம்.எஸ். தகவல் வதந்தி என்று தெரிய வந்ததும் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இருப்பினும் இந்த வதந்தியால் அணு உலையில் வேலைபார்த்து வரும் கூடங்குளம், இடிந்தகரை பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் இன்று வேலைக்கு செல்லவில்லை. தொடர்ந்து நெல்லை, குமரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications