தென் மாவட்டங்களை கலக்கிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் 4 பேர் மதுரையில் கைது
மதுரை: மதுரையில் தென் மாவட்டங்களை கலக்கிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, நாகமலை புதுக்கோட்டை, ஒத்தக்கடை, நிலக்கோட்டை உள்பட தென்மாவட்டங்களான திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட பல இடங்களில் கடந்த 4 ஆண்டுகளாக வங்கிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகள் மூலமாக பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து மதுரை மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் ஆலோசனையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் மதுரை பாசிங்காபுரத்தைச் சேர்ந்த திருமலைபாபு (37) என்பவரும், விளாங்குடியைச் சேர்ந்த பாலமுருகன்(28) என்பவரும் போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்த போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அதன் பிறகு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்ற ஆபிரகாம் (29), பாசிங்காபுரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications