ஆக்ராவில் கற்பை காத்துக் கொள்ள ஹோட்டல் பால்கனியில் இருந்து குதித்த இங்கிலாந்து பெண் டூரிஸ்ட்

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் ரகாப்பஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஜெசிகா(25) தங்கியிருந்தார். முதல் மாடியில் உள்ள அவரது அறைக்குள் ஹோட்டல் உரிமையாளர் அத்துமீறி நுழைந்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த ஜெசிகா தன்னை காத்துக் கொள்ள பால்கனி வழியே கீழே குதித்தார்.
இதில் அவரது இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன, மேலும் தலையில் பலத்த அடிபட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரின் நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹோட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தனது கணவர் கண் முன்பே 6 பேரால் கற்பழிக்கப்பட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆக்ராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications