காங். தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட சட்ட மாணவர்கள்.. ஸ்தம்பித்த ஜி.பி.ரோடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணா சாலை அருகே உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை நோக்கி திரண்டு வந்த 100 சட்ட மாணவர்களால் அந்த அலுவலகம் உள்ள சாலை ஸ்தம்பித்துப் போனது.
இலங்கைக்கு எதிராகவும், மத்திய அரசின் மெளன நிலையைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழகம் முழுவதும் கொந்தளித்துக் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில்உளள சத்தியமூரர்த்தி பவனுக்கு 100க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் கேட்டை மூடி விட்டனர். இதையடுத்து வாசலில் நின்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையே திணறிப் போனது. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications