வலுத்து வரும் மாணவர் போராட்டம்.. ஜெ. அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் வலுத்து வரும் மாணவர் போராட்டம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்றுமுக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் மாணவர் போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது. எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம், சாலைமறியல், முற்றுகைப் போராட்டம், கொடும்பாவி எரிப்பு என்று நிலைமை உள்ளது.
மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முதல்வர் ஜெயலலிதா இன்று காலை கோட்டையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை செயலாளர் ராஜகோபால், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications