மறுஜென்மம் எடுத்த மலாலா மீண்டும் பள்ளி சென்றார்

பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக போராடியவர் மலாலா யூசுப்சாய்(15). இதனால் தாலிபான் தீவிரவாதிகள் கடும் கோபம் கொண்டு, மலாலாவை தலையில் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் முதலில் பாகிஸ்தானிலும், பின்னர் இங்கிலாந்திலும் சிகிச்சை பெற்றார். அவருக்கு பல முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது உடல் நலம் தேறியுள்ள அவர் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்ஹாம் பள்ளியில் தனது கல்வியை நேற்று முதல் துவங்கினார்.
இது குறித்து மலாலா கூறுகையில், நான் பள்ளிக்கு திரும்பும் இந்த நாளை தான் எனது வாழ்நாளில் மிகவும் முக்கியமான நாளாக நினைக்கிறேன். இதுபோன்ற கல்வி உலகில் உள்ள அனைத்து பெண்களுக்குமே கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.
மலாலா தலையில் குண்டடிபட்டு பல மாதங்களாக இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும், அவரது பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications