டீசல் விலை மீண்டும் உயர்வு- நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!
Subscribe to Oneindia Tamil

எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அனுமதியளித்து. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் திடீர் திடீரென விலை உயர்வை அறிவித்து வருகின்றன. தற்போது 3-வது முறையாக இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி) விலை உயர்வுக்கான அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டது.
45 காசுகள்தான் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளூர் விற்பனை வரி அல்லது மதிப்புக் கூட்டு வரியும் இதனுடன் சேர்க்கப்படும்.இதனால் டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 51 காசுகளும், மும்பையில் 57 காசுகளும், கொல்கத்தாவில் 53 காசுகளும், சென்னையில் 55 காசுகளும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு விட்டர் டீசல் விலை ரூ.51.23லிருந்து ரூ. 51.78 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications