காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார் ஆம் ஆத்மி கெஜ்ரிவால்!!

டெல்லி அரசு அண்மையில் மின் கட்டணம், வீட்டு வரி ஆகியவற்றை உயர்த்தியது. இதை பலரும் எதிர்த்து வருகின்றனர். இதை அடுத்து தானும் களத்தில் இறங்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இதன்படி, டெல்லியில் உள்ள 264 வார்டுகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களைச் சந்தித்து, ஆம் ஆத்மி கட்சியினர் பிரசார இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
அடுத்து கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இன்று காலை முதல் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "டெல்லி அரசின் சட்டவிரோத வரிஉயர்வுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மின்சாரம் மற்றும் நீர் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கட்டணங்களை உயர்த்தியுள்ளார். தற்போதைய கட்டணங்களைச் செலுத்த வீடடின் உரிமையாளர்கள், மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளோம், என்றார்.
முன்னதாக இந்த உண்ணாவிரதத்தில் அண்ணா ஹசாரேவும் பங்கேற்பார் என்றார் கெஜ்ரிவால். ஆனால் வரமாட்டேன் என்று உடனடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார் ஹஸாரே.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications