மீண்டும் விஸ்வரூபமாகும் தெலுங்கானா விவகாரம் - ஆந்திர சட்டசபையில் அமளி!!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து ஆந்திர சட்டசபையில் கடும் அமளி ஏற்படது.
தனி தெலுங்கானா கோரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு 24 மணி நேர வாகன மறிப்பு போராட்டத்தை தெலுங்கானா தலைவர்கள் நடத்தினர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழு தலைவர் கோதண்டராமன், எம்.எல்.ஏக்கள் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ், எடாலா ராஜேந்தர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கனக்கான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் தெலுங்கானா போராட்டக் குழுவினர் முன்னெச்சரிக்கையாகவும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
இன்று காலை ஆந்திர மாநில சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களையும் எம்.எல்.ஏக்களையும் கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். சபையின் மையப்பகுதிக்கு சென்று அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இதேபோல் மாநிலத்தின் மின்வெட்டுப் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியினரும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அவையை சபாநாயகர் இருமுறை ஒத்தி வைக்கவும் நேரிட்டது.












Click it and Unblock the Notifications