இந்திய நலனுக்காக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு: எரிகிற கொள்ளியில் பெட்ரோல் ஊற்றும் மேனன்!

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இலங்கை தொடர்ந்தும் இந்தியாவின் நட்பு நாடாக திகழ்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அந்த நாடு பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.
இலங்கையில் அனைத்து இனத்தவரும் ஏற்கக் கூடிய வகையில் குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அவர்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வெண்டும்.
பாதுகாப்பு என்பதன் அர்த்தம் பரந்த எல்லையை உடையதாக மாறியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு, ராணுவம் என்ற நிலையில் இருந்து பொருளாதாரம், உணவு, எரிசக்தி, மக்களுக்கான பாதுகாப்பு என விரிவடைந்திருக்கிறது. விண்வெளி, சைபர் , தகவல் தொழில்நுட்பம் ஆகியவை, பாதுகாப்பு என்பதற்கான இலக்கணத்தை மாற்றியமைத்திருக்கின்றன.
1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிகவும் முன்னேற்றமடைந்திருக்கிறது. அணு ஆயுத சக்தி படைத்த நாடாக உள்ளோம். வழக்கமான பிரச்னைகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றைச் சமாளிக்கும் திறன் பெற்றுள்ளோம் என்றார் அவர்,
தமிழீழத் தனியரசு அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், கொலைகாரன் ராஜபக்சேவை கூண்டிலேற்ற வேண்டும் என்று தமிழகத்தில் பெரும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு என்ற பல்லவியை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பாட ஆரம்பித்திருப்பது கடும் அதிருப்தி மற்றும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications