லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை தென் தமிழகத்தில் மழை பெய்யுமாம்!
சென்னை: லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை அடுத்து தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழையும் வடகிழக்கு பருவ மழையும் பொய்த்து போனதால் பல மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது. குளங்கள், ஆறுகள் வறண்டு வற்றிப் போனதால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தாலும் தற்போது தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெயில் அடித்து வருகிறது. பருவ மாற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு 37 டிகிரி முதல் 40 டிகிரி வரை வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக 33 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அடிக்கிறது.
இந்த நிலையில் லட்சத்தீவு அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனினும் வட தமிழகத்தில் வறண்ட வானிலைதான் காணப்படும் என்றும் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications