வங்கதேசத்தில் சூறைக்காற்றுக்கு 20 பேர் பலி... 200 பலத்த காயம்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: கிழக்கு வங்காள தேசத்தில் வீசிய பலத்த புயல் காற்றுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் குடியிருப்புகளை இழந்துள்ளனர் என்று வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

அங்குள்ள பிரமன்பாரியா மாவட்டத்தில் வீசிய புயல் 20 கிராமங்களை சூறையாடியது. சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த புயல் காற்றில் மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள், கடைகள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பல கிராமங்களில் பொதுமக்கள் மின்சாரம் இன்றியும், உணவின்றியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

200க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசு அதிகாரி நூர் முஹம்மது மஜும்தர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+