இத்தாலியில் அரசு அமைக்க ஜனநாயக கட்சியை அழைத்தார் அதிபர்
ரோம்: இத்தாலியில் ஆட்சி அமைக்க அதிபர் ஜியார்ஜியோ நப்பொலிடானொ ஜனநாயகக் கட்சி தலைவர் பெர்சாணிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாலியில், கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த தேர்தலில், எந்தக் கட்சியினரும் பெரும்பான்மை பெறவில்லை. பையர் லூகி பெர்சாணி தலைமையில் போட்டியிட்ட டெமொக்ராடிக் கட்சி, பாராளுமன்றத்தின் மக்களவையில் பெரும்பான்மையை நிரூபித்தாலும், மேலவையில் பெரும்பான்மை கிட்டவில்லை. இவருடன் இணைந்து தேர்தலில் ஈடுபட்ட இடது சாரிக் கட்சித் தலைவர் சில்வியோ பெர்லுஸ்கோனி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பொருளாதாரத்தில் சீர்திருத்தவாதியாக , சமீபத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட, 69 வயது நிரம்பிய பெர்சானியும், பலத்த எதிர்ப்புக்கு இடையேதான் கட்சியில் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார். மாதிரி வாக்கெடுப்பில் கிடைத்த பெரும்பான்மையை தேர்தலில் வெற்றியாக மாற்றத் தவறிவிட்டார் என்று இவர் பற்றி கூறப்படுகின்றது.
முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை என்றால் மறுமுறை தேர்தல் நடத்தவேண்டி வரும். அரசியலில் இந்த நிலையற்ற தன்மை, ஏற்கனெவே தேங்கிக் காணப்படும் இவர்களின் பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான யுரோசோனிலும் இத்தாலியின் ஸ்திரத்தன்மை கேள்விக்குரியதாகும்.
எனவே இத்தாலியின் அதிபர் ஜியார்ஜியோ நப்பொலிடானொ, பெர்சாணியை ஆட்சி அமைக்கும்படி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று கேட்டுக் கொண்டுள்ளார். சிக்கலான நேரத்தில், திறமையாகப் பணிபுரிபவர் என்று பெர்சாணி பற்றி குறிப்பிட்ட அதிபர், பெர்சானியின் பதிலை எதிர்நோக்குவதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications